செய்யாத தவறை ஒப்பு கொள்ள மிரட்டும் என்ஐஏ அதிகாரிகள்! மயிலாடுதுறை ஆட்சியரிடம் 300 முஸ்லீம்கள் புகார்
சீர்காழி: சீர்காழி அருகே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்ததற்காக பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கேட்காத மற்றும் பார்க்காத சம்பவங்களை ஒப்புக் கொள்ள சொல்லி தங்களை மிரட்டுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த 300 பேர் மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி அன்று சென்னையில் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அல்பாசித்துடன் வாட்ஸ் ஆப் குழுவில் தொடர்பில் இருந்ததாக திருமுல்லைவாசல் பகுதியில் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தனர்.
அதனை தொடர்ந்து மேற்படி 15 நபர்களும் குறிப்பிட்ட தினத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்தனர். இதுவரை 27 நபர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளதாகவும் இதில் சிலர் சிறுவர்களாகவும், கல்லூரி மாணவர்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 15, 16 17 ஆகிய மூன்று தினங்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான சிலரிடம் அவர்களுக்கு தொடர்பில்லாத சம்பவங்களை கேட்டதாகவும், பார்த்ததாகவும் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு வர முடியாத நபர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வற்புறுத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் செயல்படுவதால் சகோதரர்களாக வாழ்ந்து வரும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தையும் பிரிவினையும் உருவாக்க முயல்கிறார்கள்.
இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மேற்படி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அதே நேரம் தவறு செய்பவர்களை சட்டப்படி தண்டிப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
மயிலாடுதுறை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications