முத்தமிழ் முருகன் மாநாடு.. "100 அடி உயர கொடி.." பிரமாண்ட வேல்.. பக்தர்கள் வருகையால் குலுங்கியது பழனி
பழனி: பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் மாநாடு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1300 கட்டுரைகள்: பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆதீனங்கள், இங்கிலாந்து, இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் என விவிஐபிக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 'தமிழ்க்கடவுள் முருகனின்' சிறப்பை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கில் முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து சுமார் 1,300 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
பிரமாண்ட அரங்கம்: இதற்காக உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தங்களது கட்டுரைகளை பதிவு செய்து வைத்துள்ளார்கள். மாநாட்டில் விழா மலர், ஆய்வு மலர் என 2 மலர்கள் வெளியிடப்படுகிறது. மாநாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
100 அடி உயரத்தில் கொடி: அரங்கங்களின் முன்பு 'மலைபோன்ற செட்' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செட்டின் மேற்பகுதியில் முருகன், சிவன்-பார்வதி இருப்பது போன்ற நுழைவு வாயில் உள்ளது. இதன் அருகிலேயே, 100 அடி உயரத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியினை ஏற்றி வைத்தார். கொடியேற்றும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி அரங்கம்: இதற்காக உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் தங்களது கட்டுரைகளை பதிவு செய்து வைத்துள்ளார்கள். மாநாட்டில் விழா மலர், ஆய்வு மலர் என 2 மலர்கள் வெளியிடப்படுகிறது. மாநாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு தனித்தனியாக அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. விஐபிக்களுக்கு கேரட், பீன்ஸ் பொறியல், உருளைகிழங்கு வறுவல், பருப்பு மசால் வடை, அடை பிரதமன் பாயாசம் உள்ளிட்ட உணவுகளும் இடம் பெற்று இருந்தன.
4 லட்சம் பேர்: மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு முருகனின் ராஜஅலங்கார படம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், கந்தசஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.
பழனியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications