சென்னையில் முத்தமிழ்ப் பேரவை விழா: இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முத்தமிழ்ப் பேரவை சார்பில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகின்றார்.

முத்தமிழ்ப் பேரவையின் 36வது ஆண்டு இசை விழாவை முன்னிட்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று (24.1.2014 -வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறுகிறது.

Karunanidhi to honour artistes

இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு ராஜரத்னா விருதினை கோவில் கண்ணாம்பூர் கே. நடராஜன் அவர்களுக்கும், இயல் செல்வம் விருதினை அவ்வை நடராஜன் அவர்களுக்கும், இசைச்செல்வம் விருதினை நித்யஸ்ரீ மகா தேவன் அவர்களுக்கும், நாதஸ்வரச் செல்வம் விருதினை திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியம் அவர்களுக்கும், நாட்டியச்செல்வம் விருதினை கே.சண்முக சுந்தரம் அவர்களுக்கும், தவில்செல்வம் விருதினை கோவிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அடுத்து 5 நாள் தொடர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+