ஒரே 'நாடக'க் கம்பெனியால் மிகக் குறுகிய காலத்தில் 2 முறை ஏமாற்றப்பட்ட மக்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முன்கூட்டியே சொல்லாமலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் முத்துகருப்பன்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மிகக் குறுகிய காலத்தில் 2 உலக மகா பல்டிகளைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு திட்டத்தை அமைக்க 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கூறியும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் கடந்த 19 நாட்களாக நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர். எனினும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

நவநீதகிருஷ்ணன் டிராமா
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைய சில நாட்களுக்கு முன்னர் மாநிலங்களவையில் உணர்ச்சிவசப்பட்டு பொங்கினார் நவநீதகிருஷ்ணன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று மிரட்டினார். ஆனால் இதற்கு அவர் கட்சி எம்பிக்களே ஜகா வாங்கினர்.

முத்துக்கருப்பன் டிராமா
இந்த நிலையில் மத்திய அரசுக்கு விதித்த கெடு முடிவடைந்த நிலையில் காவிரி நீர் கிடைக்காத நிலையில் பதவி ஒரு கேடா என்று ஆவேசமடைந்த அதிமுக எம்பி முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யபோவதாக அறிவித்தார். அதன்படி இன்று ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.

ஏமாந்துட்டாங்களே மக்கள்
ஸ்கீம் என்றால் அது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதால் முத்துகருப்பனை போல் மற்ற எம்பிக்களும் ராஜினாமா செய்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. முத்துக்கருப்பனும் ஹீரோ ஆனார்.

2 பல்டிகள்
ஆனால் வெங்கையா நாயுடு இவரது ராஜினாமா கடிதத்தில் பிழை உள்ளது என்று கூறி நிராகரித்து விட்டார். ஆனால் மறுபடியும் ராஜினாமா செய்வேன் என்று கூறாமல், இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறி எஸ்கேப் ஆகி விட்டார் முத்துக்கருப்பன்.. அதாவது மிகக் குறுகிய காலத்தில் ஒரே நாடகக் கம்பெனியால் 2 முறை ஏமாற்றப்பட்டுள்ளனர் மக்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications