நாம் தமிழருக்கு திமுகவுக்கு அடுத்த இடம்..!!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அடுத்த இடத்தை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அடுத்த இடத்தை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், பாஜக சார்பில் கரு நாகராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற இரண்டாவது இடத்தை அதிமுகவின் மதுசூதனன் பெற்றுள்ளார். திமுக 24ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
திமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று 4வது இடத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications