சீமானின் 'கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்'- ஒன்இந்தியாவில் புதிய தொடர்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதும் புதிய கேள்வி பதில் தொடர் ஒன்இந்தியா தமிழில் நாளை முதல் வெளியாகிறது.
இது வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், முதல் மூன்று பகுதிகளில் நமது கேள்விகளுக்கு சீமான் அளிக்கும் பதில்கள் வெளியாகும். அடுத்தடுத்த பகுதிகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், பின்னணி, தமிழர் - தமிழரல்லாதோர் பிரச்சினை, நாம் தமிழர் அதிகாரத்துக்கு வந்தால் செய்ய நினைக்கும் மாற்றங்கள், இப்போது அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தின் தோல்விகள், சீமானின் முரண்பாடுகள்... என ஏராளமான விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு சீமான் பதிலளிக்கிறார்.
கேள்விகளால்தான் தெளிவு பிறக்கும். ஆக்கப் பூர்வமான கேள்விகள்தான் அறிவுப்பூர்வமான தலைமைக்கு வழி வகுக்கும். ஒன்இந்தியா வாசகர்களுடன் இந்த தொடர் மூலம் உரையாட ஆவலாகக் காத்திருக்கிறேன். வாருங்கள், கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம், என்கிறார் சீமான்.
தயாரா வாசகர்களே...?
குறிப்பு - இந்த கேள்வி பதில், வீடியோ வடிவிலும் இதே பகுதியில் இடம்பெறவிருக்கிறது.
கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]












Click it and Unblock the Notifications