ஏமனில் இருந்து தப்பி வந்த நர்ஸ்கள் கலெக்டரிம் மனு- வேலை வேண்டி விண்ணப்பம்
நாகர்கோவில்: ஏமனில் இருந்து தப்பி வந்த நர்ஸ்கள் கலெக்டரிம் வேலை கேட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது அங்கு போர் மிகவும் தீவிரம் அடைந்து இருப்பதால் அங்கு நர்ஸ் மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்ற இந்தியர்கள் குண்டு மழைகளுக்கு நடுவில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தவித்து வருகிறார்கள்.

இவர்களை மீட்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஏராளமான இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஏமனில் இருந்து விமானம் மூலம் கொச்சி திரும்பியவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சொந்த ஊர் திரும்பினார்கள்.
இவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன்களாக ஏமனில் பணிபுரிந்த குலசேகரம் சந்திரசேகரன், பாலப்பள்ளம் ஜெபடானி, விரிகோடு நிஷா, கழுவன்திட்டை சவுமியா, இரவிபுதூர்கடை அமுதா உள்பட 25 பேர் இன்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து கண்ணீருடன் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தாங்கள் ஏமன் நாட்டில் நர்ஸ் மற்றும் லேப் டெக்னீசியன்களாக பணி புரிந்து வந்ததாகவும், அங்கு நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக தங்கள் உடமைகளை இழந்து சொந்த ஊர் திரும்பி உள்ளதாகவும், எனவே தாங்கள் கஷ்டம் நீங்க உள்ளூரில் மாற்று வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அவர்கள் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டரும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications