7 பேர் விடுதலை... தமிழக அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்: நளினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எங்களது 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என 25 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முதல் முறையாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது.

Nalini attends father’s funeral in Chennai

இதில் கலந்து கொள்வதற்காக நேற்று 12 மணி நேர பரோலில் வேலூர் சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார் நளினி. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்தில் தனது சகோதரர் வீட்டுக்கு வந்த நளினி, இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் நளினி. 25 ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, செய்தியாளர்களைச் சந்தித்தது இதுவே முதல்முறை.

அப்போது அவர், ‘ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நான், எனது கணவர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். 7 பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உதவி செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+