For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம்ப முக்கியம்- நமது அம்மா

எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம்ப முக்கியமானது என்று நமது அம்மா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம் முக்கியமானது என்று நமது அம்மா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக மக்கள் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

இதையடுத்து அகர்தலாவில் உள்ள லெனின் சிலைகளை அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டன.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

கடந்த இரு நாட்களுக்கு முன்பு எச் ராஜா, தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறுகையில் திரிபுராவில் 25 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்ததால் லெனின் சிலை அகற்றப்பட்டது. அது போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அகற்றுவோம்

அகற்றுவோம்

அப்போது தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நிகழ்ந்தன.

அட்மின் தான் காரணம்

அட்மின் தான் காரணம்

எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நேற்று ராஜா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெரியார் சிலை அகற்றப்படுவது குறித்து நான் கருத்து வெளியிடவில்லை. எனக்கு தெரியாமல் எனது அட்மின்தான் வெளியிட்டார். எனினும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திருந்த வேண்டும்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் தலையங்கத்தில் எச் ராஜா வருந்துவதை விட திருந்துவதே ரொம்ப முக்கியம். அட்மின் தவறு என்று காரணம் கூறி கம்பி நீட்டுவதெல்லாம் நாணயமற்ற காரியமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Namadhu Amam daily says that H.Raja should become good hearted. He should not escape by accusing his Admin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X