வகுப்பறையில் மது குடித்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6 மாணவர்கள் - வேறு பள்ளிகளில் சேர்ப்பு!
நாமக்கல்: நாமக்கல் அருகே பள்ளிக்கூடத்தில் மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக நீக்கப்பட்ட 6 மாணவர்களும், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 22ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 6 மாணவர்கள் வகுப்பறை ஒன்றில் அமர்ந்து மது அருந்தியது கண்டுபிடிக்கப் பட்டது.

மறுநாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகநாதன், குறிப்பிட்ட அந்த 6 மாணவர்களையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தங்களது தவறை அம்மாணவர்கள் ஒத்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அம்மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கினார் தலைமை ஆசிரியர்.
பொதுத்தேர்வுகள் அருகில் உள்ள நிலையில், இவ்வாறு பாதியில் பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டால் தங்களது எதிர்காலம் பாதிக்கும் என அம்மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேரச் சென்றுள்ளனர். ஆனால், அம்மாணவர்களை சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 6 மாணவர்களும் தங்களின் பெற்றோர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் பலமுறை சென்று, தாங்கள் செய்த தவறை மன்னித்து மீண்டும் தங்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர்கள் வற்புறுத்தியதை அடுத்து, மீண்டும் இந்த பிரச்னை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் தன்மை கல்வி அதிகாரி கோபிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த 6 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
முடிவில், தங்களது தவறை மன்னித்து விடுமாறு கோரியும், மீண்டும் தாங்கள் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அம்மாணவர்கள் கடிதங்கள் எழுதிக் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாணவர்கள் தற்போது பள்ளி இறுதியாண்டு படித்து வருகின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது எனவும், அவர்கள் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தவும் அவர்களை மாவட்டத்தில் உள்ள பெரியமணலி மற்றும் ஜேடர்பாளையம் அரசு ஆண்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications