மக்களின் ரத்தத்தை குடிக்க அகோர பசியோடு திரியும் காங்கிரஸ் பிதாமகன்கள்: நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நாட்டு மக்களின் ரத்தத்தை குடிக்க காங்கிரஸ் பிதாமகன்கள் அகோர பசியோடு சுற்றுவதாக அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பது குறித்து குருஷேத்ர போர் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை படுபாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. காங்கிரஸ் பிதாமகன்கள் மக்களின் ரத்தத்தை குடிக்க அகோர பசியோடு உள்ளனர். காங்கிரஸுக்கு சமாதி கட்டுங்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

நாட்டில் பொருளாதாரம் சீரழிந்துள்ளதற்கு காங்கரஸே காரணம். காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மூலம் விடை கொடுத்து அனுப்புங்கள். இந்தியாவுக்கு நல்ல தலைமை வேண்டும் எனில் அதற்கு ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும்.

திமுக

திமுக

திமுகவினர் தமிழகத்தின் உரிமையை விற்றுவிட்டனர். தேர்தலில் வென்றால் யார் பிரதமர் ஆவது என்று அவர்களால் கூற முடியுமா? இதே கோபியில் முதல்வர் ஜெயலலிதாவை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஜெயலலிதாவை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

தேர்தல்

தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் ஆகும். புரட்சி தலைவி இந்திய தலைமையாக ஆக நாம் பாடுபடுவோம் என்றார் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+