தினகரனை ஆதரிப்பதற்காக காறி துப்பினால் துடைச்சுக்குவேன்- ஓபிஎஸிடம் போனா செத்துருவேன்: நாஞ்சில் சம்பத்
அதிமுக கோஷ்டிகள் இணையும் நிலையில் நாஞ்சில் சம்பத் ஓபிஎஸ்-க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சென்னை: டிடிவி தினகரனை புகழ்ந்து பேசியதற்காக தம்மீது பொதுமக்கள் காறி துப்பினால் அதை துடைத்துக் கொள்வேன் என்றும் ஓபிஎஸ் அணிக்கு போக நேர்ந்தால் செத்துருவேன் என்றும் நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
மதிமுகவின் கொள்கைபரப்பு செயலராக வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது அவர் பிரசாரம் செய்வதற்காக இன்னோவா காரையும் ஜெயலலிதா கொடுத்திருந்தார்.

இன்னோவா சம்பத்
அன்று முதல் 'இன்னோவா' சம்பத் என அன்புடன் அழைக்கப்பட்டும் வருகிறார். ஜெயலலிதா மறைந்தபோது சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இன்னோவா காரை அதிமுக தலைமையகத்தில் திருப்பிக் கொடுத்தார்.

சசியிடம் சரண்
அடுத்த ஓரிருநாட்களிலே சசிகலாவை நேரில் சந்தித்து சரணாகதி அடைந்தார் சம்பத். சசிகலாவைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்காக நாள்தோறும் புகழ்மாலை சூட்டுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார் சம்பத்.

திவாகரன் தரப்பு டோஸ்
நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில், தீரன், திண்ணியன், காலம் தந்த தலைமகன் என்றெல்லாம் ஏகத்துக்கும் தினகரனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். இதற்காகவே திவாகரன் தரப்பிடம் இருந்து செம டோஸும் வாங்கியிருந்தார் சம்பத்.
செத்துருவேன்
நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், தினகரனை பாராட்டுவதற்காக மக்கள் என்னை காறி துப்பினால்... துப்பட்டும்.. அதை துடைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார். அதேபோல நீங்கள் ஓபிஎஸ் அணியில் இருக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, செத்துருவேன்... அப்படியே தற்கொலை செய்து கொள்வேன் என அதிரடியாக பேட்டியளித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications