நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த நாராயணசாமி ஜெயிப்பாரா?
நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

நேற்று வரை அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் மற்றும் அவருக்கு மாற்று வேட்பாளரான தமிழ்ச்செங்கோலன் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு அளித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளான இன்று புதுச்சேரி முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான நாராயணசாமி இன்று நண்பகலில் மனுத்தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உடனிருந்தார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமிக்கு திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாராயணசாமிக்கும், ஓம்சக்தி சேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
நாராயணசாமி வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும். நாராயணசாமிக்கு எதிராக அவரை தோற்கடிக்க அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. இடைத்தேர்தலில் நாராயணசாமி ஜெயிப்பாரா? நெல்லித்தோப்பு மக்களின் கைகளில் உள்ளது நாராயணசாமியின் தலைவிதி.












Click it and Unblock the Notifications