For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைப் பிரச்சினையை வைத்து தமிழகத்தில் 'பாலிட்டிக்ஸ்' செய்கிறார்கள்... நா.சா.!

Google Oneindia Tamil News

Narayanasamy
சென்னை: தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்கிறார்கள், அதை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை வந்த அவர் வழக்கம் போல விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை.

மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை செய்து தரமுடியும். மத்திய அரசு செய்யக் கூடிய உதவிகள் தமிழர்களுக்கு கிடைக்கும்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது. அரசியல் ஆதாயத்துக்காக தமிழக அரசியல் கட்சிகள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகள் நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சி என்றார் நாராயணசாமி.

English summary
Union minister for state Narayanasamy has slammed that TN parties are polticising the Lankan Tamils issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X