காவிரி விவகாரம்: கருணாநிதிக்கு மோடி பதில் கடிதம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கைவிடுத்து திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்து நரேந்திரமோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளது. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று கருணாநிதி, பிரதமர் மோடிக்கு கடந்தவாரம் கடிதம் எழுதியிருந்தார். இதை பெற்றுக்கொண்ட மோடி, கருணாநிதிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் "உங்கள் பாராட்டுக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன். மக்கள் வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரமதரை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அப்போதும்கூட, ஜெயலலிதாவுக்கு, நரேந்திரமோடி பதில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications