அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை.. தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமை ஆணையம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து விளக்கம் அளிக்க கோரி, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்கம் கோரி நோட்டீஸ் ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

அதில் தமிழக தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் 8 வாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கு காரணம் என்னவென்றும் அதனை சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு மருத்துவமனைகளில் 8000 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications