முதல்வர் எப்படி இருக்கிறார்?.. பதிலே பேசாமல் நழுவிய நவநீதகிருஷ்ணன் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன் பதிலளிக்காமல் அமைதியாகக் கிளம்பிச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் நவநீதகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தின் நிரதர முதல்வர் மாண்புமிகு அம்மாவின் உடல் நிலை குறித்து டிராபிக் ராமசாமி என்பவர் போட்ட வழக்கு வெறும் விளம்பரம் தேடும் வகையிலானது என்று கூறி தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதிகள் சொல்லி விட்டார்கள் என்றார்.
[Read This: முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருக்கிறார்.. ஆதாரம் என்ன தெரியுமா?]
அப்போது செய்தியாளர் ஒருவர், முதல்வரின் உடல் நலம் எப்படி உள்ளது. அதுகுறித்துக் கூறுங்கள் என்று கேட்டபோது பதிலே பேசாமல் தலையை மட்டும் வேண்டாமே என்று தொணி வரும் வகையில் தலையை ஆட்டியபடி லேசான புன்னகையுடன் கிளம்பிச் சென்று விட்டார் நவநீதகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications