For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவர் ஸ்பீடு... ஓசூர் அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பரிதாப பலி!

லாரி-கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மூன்று பேர் காரில் வந்துகொண்டிருந்தனர். அந்த கார் சூளகிரி அருகே காமன்தொட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டேங்கர் லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

Near Hosur Car crash on the Lorry and 3 dead

இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து உடனடியாக சூளகிரி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், அதி வேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.

English summary
Near Hosur Car crash on the Lorry and 3 dead on the Spot. The police have registered a case and are investigating the case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X