சுதந்திர தினத்தில் உண்ணாவிரதப் போராட்டம்: நெடுவாசல் மக்கள் அதிரடி!
சுதந்திர தினமான நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: சுதந்திர தினமான நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சியினரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 125 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர தினமான நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications