காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை... நல்லகண்ணு
ஸ்ரீவில்லிபுத்தூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே தமிழகத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 198 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என்றும் அதனை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications