நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் நெல் நடவுப்பணிகள் தொடங்கியது
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் பிசான பருவ நெல் சாகுபடிக்கான நடவு பணிகள் துவங்கியுள்ளன.
தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை நம்பி கார் பருவ நெல்சாகுபடி நடக்கிறது. அக்டோபர் துவங்கி நான்கு மாதங்களில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பிசான நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 72 அடி கொள்ளளவுக் கொண்ட கருப்பாநதி, 36 அடி கொள்ளளவுக் கொண்ட குண்டாறு நீர்தேக்கம் மற்றும் ராமநதி, கடனாநதி ஆகிய சிறிய அணைகள் நிரம்பி விட்டன. இந்த அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 104 அடியை கடந்துவிட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்தும் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றின் மூலம் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவை தவிர நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ராதாபுரம் என மற்ற அணைகளின் நீர்ப் பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த பருவத்தில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் நெல் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே விவசாயிகள், உழவு, நாற்று பாவுதல், நடவு, உரம் போடுதல் போன்ற சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். நெல்லையில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications