நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் நெல் நடவுப்பணிகள் தொடங்கியது
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் பிசான பருவ நெல் சாகுபடிக்கான நடவு பணிகள் துவங்கியுள்ளன.
தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையை நம்பி கார் பருவ நெல்சாகுபடி நடக்கிறது. அக்டோபர் துவங்கி நான்கு மாதங்களில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பிசான நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 72 அடி கொள்ளளவுக் கொண்ட கருப்பாநதி, 36 அடி கொள்ளளவுக் கொண்ட குண்டாறு நீர்தேக்கம் மற்றும் ராமநதி, கடனாநதி ஆகிய சிறிய அணைகள் நிரம்பி விட்டன. இந்த அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 104 அடியை கடந்துவிட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்தும் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றின் மூலம் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவை தவிர நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ராதாபுரம் என மற்ற அணைகளின் நீர்ப் பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த பருவத்தில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஏக்கர் நிலத்தில் நெல் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே விவசாயிகள், உழவு, நாற்று பாவுதல், நடவு, உரம் போடுதல் போன்ற சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். நெல்லையில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications