ஆன் லைனிலேயே கண் பரிசோதனை - அசத்தும் அரசு மருத்துவமனை!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆன்லைன் மூலம் கண் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தகவல் பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்படைந்து ரத்த கசிவு ஏற்படுகி்றது. இதனால் பார்வையிழப்பு அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் கட்டுபாட்டில் உள்ளவர்களுக்கும் இது பொருத்தும். இது தொடர்பாக அவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை கண் பார்வையை பரிசோதித்து கொள்வது நல்லது. இதற்கான கருவிகள் நெல்லை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருவி கணினியுடன் இணைக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, பாப்பாப்குடி, மானூர், களக்காடு, ராதாபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக விழித்திரை படம் எடுத்து உடனடியாக நெல்லைக்கு மருத்துவமனைக்கு கம்யூட்டருக்கு அனுப்பப்படும்.
அங்கு டாக்டர்கள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர். மேல் சிகிச்சை தேவைப்பாட்டால் உடனடியாக ஆன்லைனிலேயே தகவல் அளித்து விடுவர். அதற்கேற்ப நெல்லை மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை வசதியை நெல்லை மருத்துவமனை, ராணி எலிசபேத் வைரவிழா டிரஸ்ட், இந்திய மக்கள் அடிப்படை சுகாதார இயக்கம் ஆகியவை இணைத்து செயல்படுத்துகிறது.
இதுகுறித்து டீன் கண்ணன் கூறுகையில், மாநில அளவில் நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டம் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. மூன்று வருட காலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications