கேரளாவுக்கு கடத்திய ரூ 43 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: 2 பேர் கைது
செங்கோட்டை: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரூ.43 லட்சம் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
நெல்லைமாவட்டம் தென்காசியிலிருந்து செங்கோட்டை புளியரை வழியாக கேரளமாநிலம் ஈராத்துபேட்டை என்றப் பகுதிக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் கேரளா அரசுப் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

அந்த பேருந்தை கேரளா மாநிலம்ஆரியங்காவு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் புனலூர் மதுவிலக்கு போலீஸ் அதிகாரிகள் அனில்குமார்,ராஜீவ் உள்ளிட்ட குழுவினர் நிறுத்திசோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்தில் பயணிகள் பொருட்களை வைக்கும் பகுதியில் கனமான இரண்டு ட்ராவல் பேக் இருப்பதை சோதனை செய்தனர்.அப்போது அதில் கட்டுக்கட்டாய் ரூபாய்.1000 ஆயிரம்,500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ட்ராவல் பேக்கில் 10 லட்சம் ரூபாய் இருப்பதாக சொல்லியுள்ளனர். உடனே ரூபாய் கட்டுகளை போலீசார் எண்ணவே அதில் மொத்தம் 43 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. விசாரணையில் அவர்கள் கடையநல்லுரை சார்ந்த சாகுல்ஹமீத்(45) முகம்துசலீம்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாகவும், புனலூர் சென்றதும் அங்கு ஒருநபர் வாங்கிக்கொள்வார் எனவும் தெரிவித்தனர். இதற்கு கூலியாக தலா 5ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பணம் கொடுத்த நபர் யார், பணம் எங்குசெல்கிறது என்ற விபரம் குறித்து தொடர்விசாரணை நடக்கிறது.
தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் 43 லட்சம் ரூபாய் சிக்கிய சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications