ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் புரட்சி... கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் #SterliteProtest
ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி அள்ளுவிட்டோம். இதோ மற்றொரு சுவாச போராட்டம் என்று ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாபெரும் புரட்சி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் நேற்று முதல் பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
|
மக்களுக்கு துணை
#ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்...!
|
நச்சு ஆலை
#தமிழர்களின் புரட்சி வெல்லட்டும்... நச்சு ஆலையை இழுத்து #மூடட்டும்... #தமிழராய் ஒன்றினைவோம்.. இப்புண்ணிய #பூமிக்கு எதிரானவற்றை #விரட்டுவோம்... வெற்றி நமதே... #ஸ்டெர்லைட் ஆலையை இப்பூமியிலிருந்து #அப்புறபடுத்துவோம்.
|
கொதித்த தமிழர்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொதித்து எழுந்த தமிழர்கள்
|
டார்ச் லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மெரினாவில் மெய் சிலிர்க்க வைத்த டார்ச் லைட் மொமென்ட் மீண்டும்...
|
அள்ளுவிட்டோம்
ஜல்லிகட்டில்
மல்லுகட்டி
அள்ளு விட்டோம்..
இதோ
இன்னுமொரு
சுவாச
போராட்டம்..!!
நடை திறட்டு
படை விரட்டு
விடை பெறட்டும்..!!
|
தன்னெழுச்சி போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக கூடிய கூட்டம்
இளைஞர்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடிய கண்டன பொதுக்கூட்டத்தின் மூலம் வலுக்கிறது ஆலைக்கு எதிரான #போராட்டம்












Click it and Unblock the Notifications