ஜெ. உடலில் அதிமுக கொடியை இருட்டடிப்பு செய்து தேசியக் கொடியை போர்த்தியது ஏன்? நெட்டிசன்ஸ் 'டவுட்'
ஜெயலலிதா உடலில் அதிமுக கொடியை இருட்டடிப்பு செய்து தேசிய கொடியை போர்த்தியது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்ஸ்
சென்னை: முதல்வராக இருந்தபோது மறைந்த எம்ஜிஆரின் உடலில் அதிமுக கட்சி கொடிதான் போர்த்தப்பட்டிருந்தது.. தற்போது முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா உடலிலோ அதிமுக கொடி இருட்டடிப்பு செய்யப்பட்டு தேசியக் கொடி போர்த்தப்பட்டிருக்கிறது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
1987-ல் எம்ஜிஆர் மறைந்த போது ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது 21 மணிநேரமாக எம்ஜிஆர் அருகேயே நின்றிருந்தார் ஜெயலலிதா.

எம்ஜிஆரின் உடலில் அதிமுக கொடி போர்த்தப்பட்ட நிலையில்தான் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது முதல்வராக இருந்து மறைந்திருக்கும் ஜெயலலிதாவின் உடலும் ராஜாஜி ஹாலில்தான் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் உடலிலும் அதிமுக கொடிதான் போர்த்தப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக கொடியை இருட்டடிப்பு செய்து தேசியக் கொடி போர்த்தப்பட்டிருப்பது ஏன் சமூக வலைதளங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications