திராவிட நாடு வந்துச்சுன்னா... கற்பனையை ஓடவிடும் நெட்டிசன்ஸ்
மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிட நாடு கோரும் முழக்கம் வலுத்துள்ளது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிட நாடு கோரும் முழக்கம் வலுத்துள்ளது. திராவிட நாடு என்ற முழக்கத்தை நெட்டிசன்கள் டிவிட்டரில் டிரென்டாக்கி வருகின்றனர்.
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடைவித்துள்ளதற்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் தனிநாடு முழக்கத்தை தென் மாநிலங்கள் கையில் எடுத்துள்ளன. மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லையேல் தனிநாடு கொடு என அவர்கள் கோஷமிடத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
லிஸ்ட் கூடுதே!
#இந்திய நாடு #பெளத்த நாடு #திராவிட நாடு #லிஸ்ட் கூடுதே! என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அடைந்தால் திராவிட நாடு
அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு! - பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவு கூறுகிறார் இந்த நெட்டிசன்..
|
அவருக்கு அவர் பிரச்சனை
தமிழ் பசங்க, கேரள பொன்னுங்க பிரமாதமான ஜோடி என திராவிட நாடு கோரிக்கையின் ஊடாக தனது விருப்பத்தையும் சொல்கிறார் இந்த நெட்டிசன்
|
யோசிக்க வேண்டிய நேரம்
நான் இந்தியாவை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டேன், ஆனால் மோடி மற்றும் அவரது காவி தீவிரவாதிகளால் அது முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
5 மாநில வருவாய்
மற்ற 24 மாநிலங்களைக் காட்டிலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் அதிக வரி வருவாய்யை தருகின்றன.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
தனியாக பிரிக்கப்பட்டால்
திராவிட நாடு என தனியாக பிரிக்கப்பட்டால், அனைத்து துறையிலும் மற்ற வளர்ந்த மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட முடியும் என்கிறார் இந்த நெட்டிசன்
|
சூட்டை உணரப்போகிறது
மத்திய அரசு விரைவில் சூட்டை உணரப் போகிறது.. என்கிறார் இந்த நெட்டிசன்..












Click it and Unblock the Notifications