தமிழக முதல்வரே.. வரலாற்றில் இடம் பிடிக்க பொன்னான வாய்ப்பு..!!
7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ராஜிவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில
|
நிரபராதிகள்
பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி ராபர்ட் பயஸ் ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்
|
கண்ணீர் துளிகளுக்கு விடுதலை
கால் நூற்றாண்டு
காத்திருப்பை
தரித்திருக்கும்
கண்ணீர்துளிகளுக்கு
விடுதலை கொடுத்து
விடுங்கள்...,
|
உடனடியாக விடுதலை செய்
ஆயுள் தண்டனைக்கும் அதிகமாகவே அனுபவித்து விட்டார்கள்
தமிழக அரசே இப்போதாவது உடனடியாக விடுதலை செய்..
|
பொன்னான வாய்ப்பு
@CMOTamilNadu தமிழக முதல்வரே, வரலாற்றில் இடம் பிடிக்க காலம் இதை விட ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்காது.
ஏழு அப்பாவி தமிழர்கள் விடுதலை செய்யப்படுவதன் மூலம், இக்காலத்தில் முதல்வராக இருக்கும் நீங்கள் வரலாற்றில் கொண்டாடப்படுவீர்கள்.
உங்களின் அத்துனை தவறுகளையும் வரலாறு மறந்துவிடும்.












Click it and Unblock the Notifications