திசை திரும்பிய இயக்குநர் சேரனின் சர்ச்சை பேச்சு.... இயக்குநர் விஜயபத்மாவுடன் மோதல்!
சென்னை: திருட்டு டிவிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் சேரன். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இயக்குநர் விஜயபத்மா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சேரனின் கருத்தை விமர்சித்திருந்தார். இந்த கருத்துகளுக்கு இயக்குநர் சேரனும் (Cheran Pandiyan) பதிலளித்திருந்தார்.

பின்னர் நேற்று தமது பேச்சு தொடர்பாக சேரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில் இந்த பிரச்சனை இப்போது திசை திரும்பி இயக்குநர் விஜயபத்மாவுடன் புது மோதலாக வெடித்திருக்கிறது.
இது குறித்து தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர் எழுதியுள்ளதாவது:
முகநூல் நட்புகளே..இயக்குநர் சேரன் ஈழத்தமிழ் போராட்டத்தில் ஈடுபட்டது அருவெருப்பானது என்று பொது மேடையில் ஈழத்தமிழர்களை தரமிறக்கி பேசியது தவறு என்று பதிவினைப் போட்டேன்.

அதற்கு காரணம் அவர் கூறிய அதேப் போராட்டங்களில் உணர்வுரீதியாக நானும் பங்கெடுத்துள்ளேன்.அவர் வார்த்தைகள் அவரது சொந்தக் கருத்தாக இல்லாமல் அது சினிமாவிழாவில் பேசப்பட்டதால், எங்களைப் போன்ற உணர்வாளர்களை வேதனைப் படுத்துகிறது.என்பதை நான் வெளிப்படுத்தி சேரன் தன் தவறை உணர்ந்து வார்த்தை களை திரும்பப் பெற்று ஈழத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்தேன் இது தவறா?
சேரன் இதற்கு தன் பதிலாக என்னைத் தாக்கி பதில் கொடுத்துள்ளார். இதிலிருந்தே இயக்குநர் சேரன் என்ற போர்வையில் இருக்கும் நபரின் சுயருபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் அவர் சில emotional threat போன்ற வார்த்தைகளை இந்தப் பதிவில் உபயோகித்துள்ளார். இப்பொழுது சேரன் என்பவர் யார் என்று உங்களுக்கும் புரிந்து இருக்கும்.
அவரிடம் நேர்மையான அணுகுமுறையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். புதிய தொழில்நுட்பம் வளர வளர அதை வியாபாரமாக மாற்றுவது எப்படி என்று யோசிக்காமல் குறை கூறிக்கொண்டு இருப்பது அறிவீனம்.
இயக்குநர் சகோதரர் சேரன் அவர்கள் பேசிய வார்த்தைகள் என் உறவுகள் என் தமிழ் இனமக்கள் ஈழத்து சகோதர சகோதரிகள் மனதை புண்படுத்தியிருக்கும் என்பதை நான் உணர்வேன்.
அந்த வார்த்தைகளுக்காக எங்கள் திரையுலகம் சார்பாக நான் இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன். அவர் வார்த்தைகள் அவர் சொந்த கருத்து.
எங்கள் திரையுலகிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சகோதரர் சேரன் அவர்களே உங்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் வைத்து இருக்கிறீர்கள். "சினிமா இல்லாமல் பிழைக்க வேற வழி தெரிந்தால்" என்று என்னைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கு நீங்கள் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். விடமாட்டேன்
இவ்வாறு விஜயபத்மா எழுதியுள்ளார்.
தம் மீதான சேரனின் விமர்சனத்துக்கு ஆதரமாக அவரது கருத்து பதிவையும் விஜயபத்மா படமெடுத்து போட்டிருக்கிறார்.
இந்த பிரச்சனை எங்குபோய் முடியும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கவலை!
ஆடியோ ரிலீசில் இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரனின் 'கன்னா பின்னா' பேச்சு - வீடியோ
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications