Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புதிய போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் நியமனம்: சிறைத்துறை இயக்குனரானார் ஜார்ஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் திடீரென்று மாற்றப்பட்டனர். சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்து வரும் எஸ்.ஜார்ஜ், சிறைத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தற்போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் டி.கே.ராஜேந்திரன் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

New police chief: George makes way for Rajendran

இதேபோல் தற்போது சிறைத்துறை இயக்குனராக இருந்து வரும் ஜே.கே.திரிபாதி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

1984ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்த ஜார்ஜ், சென்னை மாநகர காவல்துறை ஆணையலாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளும் இன்று தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+