6 மாதத்தில் கசந்துபோன “காதல் திருமணம்” – புது மணப்பெண் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் காதல் திருமணம் புரிந்து கொண்ட பெண் ஒருவர் 6 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடித்துவிட்டு தகராறு:

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சதீஷ் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

விஷம் குடித்த மனைவி:

இதில் மனம் உடைந்த பிரியா சம்பவத்தன்று விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.

பிரியா பரிதாப பலி:

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

மகளிர் போலீசார் விசாரணை:

இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் சதீஷிடம், ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகின்றது.

குடும்பத்தினர் சோகம்:

கணவரின் குடிப் பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+