ஈரோட்டில் தவறான சிகிச்சையால் புதுமாப்பிள்ளை மரணம் – உறவினர்கள் முற்றுகை போராட்டம்
ஈரோடு: ஈரோட்டில் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் புது மாப்பிள்ளை மரணமடைந்த காரணத்தினால் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் பிரகாஷ். இவருக்கும் இந்துமதி என்பவருக்கும் மூன்று மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த 23 ஆம் தேதி காலை வங்கி வேலைக்காக வீட்டில் இருந்து டூவீலரில் சென்ற பிரகாஷ் முத்துகவுண்டன்பாளையம் பிரிவு சுற்றுப்பாதைக்கு பக்கத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் லேசான காயத்துடன் தப்பிய பிரகாஷ் அவரே எழுந்து ஒரு ஆட்டோ பிடித்து ஏறி ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
பிறகு தன் குடும்பத்துக்கு மொபைல் மூலம் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பிரகாஷின் உடல் நிலையை பரிசோதித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் அறிவுறுத்தினர்.
இதற்காக மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். உறவினர்களும் உடனடியாக 1.5 லட்சம் பணத்தை செலுத்தினர். அறுவை சிகிச்சையை முடித்ததும் மயக்கம் தெளிய இன்னும் இரண்டு நாள் ஆகும். பிரகாஷ் நன்றாக உள்ளார்' என உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பிரகாஷ் இதய நோயால் இறந்து விட்டதாக கூறிய டாக்டர்கள் அவரது உடலை எடுத்துக்கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீஸார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரகாசின் மரணம் குறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications