ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற பாஜக தீவிரம்... சீதாராம் யெச்சூரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லி: ஜனாதிபதி பதவியை பாஜக கைப்பற்ற அதிரடி வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், ஆளும் பாஜக அரசு சார்பாக, இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து தரப்பின் ஆதரவை பெற்ற ஒரு வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது.

பாஜக மூவர் குழு
இந்நிலையில், பாஜக சார்பாக, 3 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவை தெரிவிக்கும்.

யெச்சூரியுடன் சந்திப்பு
அதன் அடிப்படையில், இன்று டெல்லியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அவருடன் வெங்கய்ய நாயுடுவும் சென்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

23ம் தேதி மனுதாக்கல்
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், வேட்பாளர் பெயரை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக தனது வேட்பாளர் வரும் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பொது வேட்பாளர்
ஒருமித்த கருத்து என்ற பெயரில் தனக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications