திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!

இந்த தொடர் தாக்குதலுக்கு பாஜகதான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரசார் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சோனார்பூர் பகுதியில், வன்முறையில் உயிரிழந்த டிஎம்சி தொண்டர் ஒருவரின் குடும்பத்தினரைச் சந்திக்க அபிஷேக் பானர்ஜி சென்றார். அப்போது அங்கு திரண்ட நூற்றுக்கணக்கானோர், அவருக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, கற்கள், முட்டைகள் மற்றும் காலணிகளை வீசி அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கூறிய அபிஷேக், ஒரு கும்பல் தன்னைச் சூழ்ந்து சட்டை மற்றும் கண்ணாடியைக் கிழித்து, செங்கற்களால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். "அதிர்ஷ்டவசமாக நான் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்திருந்ததால் என் தலை தப்பியது, இல்லையெனில் மண்டை உடைந்திருக்கும்; இது பாஜாகவினரின் திட்டமிட்ட கொலை முயற்சி" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த அபிஷேக் பானர்ஜியை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது எனப் புதிய ஆளும் கட்சியான பாஜக தரப்பில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சோனார்பூர் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி மற்றும் செய்தி ஊடக வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தபான் மைட்டி, ஆகாஷ் உள்ளிட்ட 5 உள்ளூர்வாசிகளைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் காரணம்?
மேற்கு வங்கத்தில் பாஜக தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் பாஜகவினரின் வேலைதான் என்று மம்தா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பாஜக அதை அப்படியே மறுத்து வருகிறது. இது மக்களின் அதிருப்தி என்றும், மக்கள் தங்களுக்காக எதையும் செய்யவில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications