இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!
சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் இதன் பாதிப்பு எதிரொலித்திருக்கிறது. இன்று சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.46 உயர்த்தப்பட்டு ரூ.3283க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே வணிக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயரத்தப்பட்டிருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மத்திய கிழக்கின் தாக்கம்
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் 20% நடைபெறும் ஹார்முஸ் நீரிணை இன்னும் முழுமையாக திறக்கப்படாததால், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. அதேபோல எல்பிஜி சிலிண்டர் விலையும் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இன்னும் ஈரான்-அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. டிரம்ப் தரப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. எனவேதான் சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி தொடர்கிறது. இது இந்தியாவையும் கடுமையாக பாதித்திருக்கிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை உயர்வால், ஓட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், மக்கள் ஓட்டல் உணவுகளை வாங்குவதை தவிர்க்க தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஓட்டல் தொழில் நலிவடைய தொடங்கியிருக்கிறது.
நிலைமையை சமாளிக்க பல ஓட்டல்களும் விறகு அடுப்புகளுக்கு மாறியிருக்கின்றன. இருப்பினும் விறகு விலை அதிகமாக இருப்பதால், ஓட்டல்களால் அதை சமாளிக்க முடியவில்லை.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications