சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதாக கூறப்படும் 23 வயது இளைஞர் விஷ்ணு, கஞ்சா கும்பலினரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் குலை நடுங்கச் செய்யும் வகையிலான சம்பவம் அரங்கேறியுள்ளது. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை அருகே விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலரை பிடித்து தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பலினர் விஷ்ணுவை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களால் சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடை இளைஞர் விஷ்ணுவின் உறவினர்கள், பொதுமக்கள் கதறி துடித்தனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி, விஷ்ணுவின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு உண்டானது. உடனடியாக போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!













Click it and Unblock the Notifications