தண்ணீர் எப்படி இருக்கு பார்ப்போம்.. நெம்மேலியில் நீரை குடித்து பார்த்து ஆய்வு செய்த முதல்வர் விஜய்
சென்னை: சென்னை மாமல்லபுரம் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நன்னீராக்கப்பட்ட நீரை முதல்வர் விஜய் குடித்து பார்த்து ஆய்வு செய்தார்.
தலைநகர் சென்னையில் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வட நெம்மேலியில் ஒரு நாளைக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டமானது நிறைவடையும் பணியில் உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய் இன்று நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது திட்டத்தின் செயல்பாடு, உற்பத்தி திறன், விரிவாக்க பணிகள் என அனைத்தையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது விஜய் நன்னீராக்கப்பட்ட நீரை குடித்து பார்த்தார். தொடர்ந்து புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரை அதிகாரிகளுக்கு விஜய் அறிவுறுத்தினார்.













Click it and Unblock the Notifications