வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்
சென்னை: ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்தவாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளே இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றுள்ள சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஆளுநர் மாளிகையில், 'வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்' என்கிற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த படத்தில், வள்ளுவர் காவி நிற உடையில் இடம்பெற்றிருந்தார். இதுதான் சலசலப்புகளுக்கு காரணம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திருவள்ளுவரை வெள்ளை உடையில்தான் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆனால், இந்துத்துவா அமைப்புகள்தான் காவி உடை கொண்ட திருவள்ளுவரை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காவி திருவள்ளுவர் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
மட்டுமல்லாது, திருவள்ளுவர் சனாதினி என்றும் ஆளுநர் கூறியிருந்தார். "திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தாரா அல்லது வெள்ளை உடுத்தினாரா என்பது முக்கியமல்ல. அவரின் நெற்றியில் திலகம் இருந்ததா இல்லையா என்பதும் பொருட்டல்ல. இந்த நாட்டிற்கு அவர் செய்த பங்களிப்பே மிகவும் முக்கியமானது. சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட திருவள்ளுவர் முன் தலைவணங்கியே ஆக வேண்டும். அதுவே திருவள்ளுவரின் பெரும் சக்தி.
ஆபத்து வரும்போது அவதரிப்பேன் என்று கிருஷ்ணர் மொழிந்ததுபோல ஞானிகள் தோன்றுகிறார்கள். ஆதி சங்கராச்சாரியராகவும், ஞானேஸ்வராகவும், துளசிதாசராகவும் தோன்றியுள்ளனர். சில சமயங்களில் திருவள்ளுவராகவும் ஞானிகள் தோன்றினர்.
திருவள்ளுவர் போன்ற ஞானிகளின் வாழ்வின் ஒற்றை நோக்கம் மக்கள் நல்வாழ்வே. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, யுகத்திற்கோ உரியவர்கள் அல்ல. காலம் கடந்து எக்காலத்திற்கும் பொருத்தமானவர்கள்.
திருவள்ளுவரின் போதனைகள் காலம் கடந்து நிற்கின்றன. எனவே, அவர் ஒரு சனாதனிதான். அப்படியிருக்க, அவரை சனாதனப் பாரம்பரியத்தின் சீடர் என்று அழைப்பதில் என்ன தவறு? அதுதான் உண்மை. இதை நம்மால் மறுக்க முடியாது" என்று ஆளுநர் கூறியிருந்தார்.
இதற்கு தவெக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் கடந்து சென்றுவிட்டார். தவெக இந்த விவகாரங்களை இப்படித்தான் கையாள்கிறதோ? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications