தமிழகம், ஆந்திராவில் இன்னும் இருக்கு 'தேவதாசி' கொடுமை.. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் தேவதாசி முறை குறித்து விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் தேவதாசி முறை குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேவதாசி முறை போன்று சிறுமிகள் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விடும் கொடூரம் இன்னும் அரங்கேறுவதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள கிரமங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பலரும் புகார் அளித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் சிறுமிகள் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டு திருவிழாவிற்கு அனுப்பப்படுகின்றனர்.

நேர்ந்து விடப்படும் சிறுமிகள்
அங்கு இளைஞர்கள் அந்தப் பெண்களை நிர்வாணப்படுத்திய பின்னர் அவர்கள் மாதம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுவிதாகத் தெரிகிறது. இந்தச் சிறுமிகள் அதற்குப் பின்னர் பெற்றோருடன் சேர்ந்து வாழ அனுமதி கிடையாது.

தேவதாசி முறையின் மற்றொரு விதம்
கோவிலில் மட்டுமே வசிக்க வேண்டும், அவர்களை பொதுசொத்து போல நடத்துவதோது, பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. தேவதாசி முறையின் மற்றொரு விதம் இது என்று சொல்லப்படுகிறது.

உரிமை மீறல்
இந்தப் புகார்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிபவும் உற்று பார்க்க வேண்டிய விஷயம் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய செயல் நடப்பது உண்மையெனில் அது அடிப்படை உரிமை மீறல் மட்டுமின்றி அவர்களுக்கான கல்வி உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மறுக்கும் வன்முறைச் செயல் என்று மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் ஒழிக்கப்படவில்லையா?
கடந்த 2003ல் குழந்தைகள் பாதுகாப்பு மேம்பாட்டு மையம் மற்றும் பெண்கல்வி மேம்பாட்டு மையம் மேற்கொண்ட ஆய்வின்படி திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் தேவதாசி முறை தடை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஆந்திர எல்லையையொட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் அருகில் இருக்கும் சில கிராமங்களில் இன்னும் தேவதாசி முறை நடைமுறையில் இருப்பதாக சிறார் நீதி வாரிய உறுப்பினர் மற்றும் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கடவுள் பாதுகாப்பில்
இந்த சிறுமிகள் மலைவாழ் மக்கள் இல்லை என்றும், சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பருவமடைந்த பெண்களை கடவுளின் பாதுகாப்பில் விடுவதாகக் கூறி இந்த அநீதி நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

நோட்டீஸ்
எனவே இந்த குற்றச்சாட்டு குறித்து இருமாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டைரக்டர் ஜெனரல்கள், திருவள்ளூர், சித்தூர் மாவட்ட நீதிபதிகள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் 4 வாரங்களுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications