திருச்சி, விருதுநகர் உள்பட 3 இடங்களில் சுத்துப்போட்ட என்ஐஏ அதிகாரிகள்.. அதிரடி சோதனை
சென்னை: தமிழகத்தின் மூன்று இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் பதிவான வழக்கு ஒன்று தொடர்பாக கொச்சின் மண்டல அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான சம்பவத்தை விசாரிக்கும் விசாரணை முகமையாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் அதிகாரிகள், இன்று திடீரென தமிழகத்தின் 3 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் பதிவான வழக்கு ஒன்று தொடர்பாக கொச்சின் மண்டல அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த திடீர் சோதனை எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை.
சோதனை முடிவுக்கு பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், எது தொடர்பான வழக்கு என்பது பற்றிய முழு தகவல்களும் வெளியிடப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. கேரளாவில் ஏதேனும் மாவோயிஸ்ட் தொடர்பான வழக்கா? அல்லது பயங்கரவாதம் தொடர்பான வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. இன்று காலை முதலே நீடித்து வரும் என்.ஐ.ஏ சோதனையால் திருச்சி, விருதுநகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று எல்லை தாண்டிய பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நான்கு மாநிலங்களில் உள்ள 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், 22 வயதுடைய இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
"டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வீசப்பட்டதாகக் கூறப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications