For Quick Alerts
For Daily Alerts
Just In
குளுகுளுவென தொடங்கியது ஊட்டி மலர்க்கண்காட்சி- இரண்டாவது சீசன் ஸ்டார்ட்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையில் இரண்டாம் சீசனுக்கான மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் தொடங்கியுள்ளது.
நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்கள் முதல் சீசனாகவும், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் 2 ஆம் சீசனாகவும் கருதப்படுகிறது.
இதையொட்டி அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியுள்ள இரண்டாம் சீசனுக்கான மலர் கண்காட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன.இதில் இன்கோ மேரிகோல்டு உள்ளிட்ட 125 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள மெகா ரங்கோலி அனைவரையும் கவர்ந்துள்ளது. மலர்க்கண்காட்சி தொடங்கியதை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments
English summary
Ooty flower festival second phase started with mega rangoli for attracting the tourists.
Story first published: Saturday, September 19, 2015, 12:08 [IST]