ப்ளூவேல் விளையாடிய கரூர் மாணவன்... டாட்டூவை பார்த்து கண்டுபிடித்த ஆசிரியர்!
கரூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியின் மாணவன் ப்ளூவேல் விளையாடுவதை அவன் கையில் இருக்கும் டாட்டுவை பார்த்து கண்டுபிடித்துள்ளார் ஆசிரியர்
Subscribe to Oneindia Tamil
கரூர் : ஒன்பதாம் வகுப்பு மாணவன் ப்ளூவேல் விளையாடுவதை அவன் கையில் ப்ளூவேல் வரையப்பட்டிருப்பதைக் கண்டு அடையாளம் கண்டு குழந்தைகள் நல மையத்தில் மாணவனை ஆசிரியர் ஒப்படைத்துள்ளார்.

Recommended Video

உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் பெற்றோர்களே!-வீடியோ
கரூர் அருகே நடையனூரில் அரசு உதவி பெறும் பள்ளியல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் நடத்தையில் ஆசிரியருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து மாணவனை கண்காதித்து வந்துள்ளார் அந்த ஆசிரியர் அப்போது மாணவன் கையை கிழித்து ப்ளூவேல் படம் வரைந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசாரிடம் அந்த ஆசிரியர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாணவன் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த மாணவனை நல்வழிப்படுத்தி, இந்த விளையாட்டின் தாக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications