நிர்பயாவின் நினைவாக.. கனத்த இதயத்துடன் சென்னை மெரீனாவில் கைகோர்த்த இதயங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் இளம் மருத்துவ மாணவி நிர்பயா, ஆறு கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் உயிர் நீத்த சம்பவத்தின் 2வது ஆண்டு நினைவு தினம் சென்னையில் பல்வேறு அமைப்புகளால் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஸ்பேஸ் ரிட்ஸ் இந்தியா, ஸ்கூல் ஆப் சக்ஸஸ், ரோட்டரி கிளப் போர்ட் சிட்டி, ரோட்டரி இன்டர்நேஷனல், ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஸ்பாட்லைட் ஆகியவை இணைந்து சென்னை மெரீனா கடற்கரையில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை நடத்தின.

காந்தி சிலை பின்புறம் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு இது நடத்தப்பட்டது.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவியர் உள்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications