நிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்?
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
சென்னை: கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, நிர்மலா தேவி வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.
Apr 17, 2018, 3:28 pm IST
ஆளுநரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் பல்கலை. விசாரணை நிறுத்தம்
Apr 17, 2018, 3:28 pm IST
பேராசிரியர் விவகாரத்தில் காமராஜர் பல்கலை விசாரணைக் குழு வாபஸ்
Apr 17, 2018, 3:06 pm IST
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Aruppukottai college assistant professor, Nirmala Devi allegedly persuaded girl students to offer sexual favours to top officials in Madurai Kamaraj University.