வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு வரி ஏதும் விதிக்கலையே... நிர்மலா சீதாராமனின் பொறுப்பற்ற பேச்சு!
சென்னை: வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு வரி ஏதும் அரசு விதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்தார்.நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வழி வகை செய்
சென்னை: வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு வரி ஏதும் அரசு விதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வழி வகை செய்யும் ஜிஎஸ்டி என்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும் மக்களை சமாதானப்படுத்த ஜிஎஸ்டியால் இந்தியா வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்பது போன்ற மாயதோற்றத்தை பாஜக அரசு உருவாக்கிவிட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் ஜிஎஸ்டியின் உண்மை முகம் குறித்து நெட்டிசன்கள்
ஆதாரத்துடன் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
உணவுகளின் விலை அதிகரிப்பு வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரியும் விதிக்கவில்லை - #NirmalaSitharaman#GST pic.twitter.com/H5diy27wd3
— Thanthi TV (@ThanthiTV) July 2, 2017
இந்நிலையில் ஹோட்டல்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்தும், உணவு பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்தும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், வீட்டில் சமைத்து உண்பவர்களுக்கு அரசு எந்த வரிவிதிப்பையும் விதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவ்வளவுதான் இப்போது நெட்டிசன்களிடம் வறுபடுகிறார்












Click it and Unblock the Notifications