"யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்".. நீலகிரி கலெக்டர் திவ்யா வேண்டுகோள்!
நீலகிரியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு உள்ளது
ஊட்டி: யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்.. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் 42 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்கிறது" என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வழக்கமாக எப்போதுமே நீலகிரியில் மழை பொழிவு இருக்கும் என்றாலும், இந்த புயலில் கரையை கடக்கும்போது, கண்டிப்பாக மேலும் மழை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கும்போது, "நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழையும், பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்புள்ளது.. அதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் 'நிவர் புயல்' காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ,வாகனங்கள், மின் வசதி, 40 பேரிடர் பயிற்சி குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 456 புயல் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. நீலகிரி மலைப்பகுதியாக இருப்பதால் அதிக காற்றும் , மழையும் வர வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தாழ்வான இடங்கள், மண் சரிவு ஏற்படகூடிய இடங்களில் வீடுகளில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவசர உதவிகளுக்கு,1077 க்கு தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், யாரும் பயடப்பட தேவையில்லை" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications