என்எல்சி ஊழியர் துப்பாக்கிச் சூட்டில் பலி.. தொழிலாளர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்
நெய்வேலி: என்எல்சியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஒப்பந்த தொழிலாளர் பலியானதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஈடுபட்டுள்ளனர்.
நெய்வேலியிலும், என்எல்சி வளாகத்திலும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

முதலாவது பிரிவு மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஒப்பந்தத் தொழிலாளர் ராஜா. இவர் நேற்று 2வது சுரங்கப் பகுதிக்குள் செல்ல முயன்றபோது அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ராஜா மீது மத்தியப் படை வீரர் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலை சிதறி கோரமான முறையில் உயிரிழந்தார் ராஜா.
இது என்எல்சி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக திரண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சிலும் இறங்கினர். பதிலுக்கு மத்திய தொழிலக படையினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீஸார் விரைந்து வந்து மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடியடி நடத்தித் தொழிலாளர்களைக் கலைத்தனர்.
இந்த பயங்கர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் துப்பாக்கியால் சுட்ட வீரரைக் கைது செய்ய வேண்டும், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications