திமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: பொன். ராதாகிருஷ்ணன் மறுப்பு
சென்னை: திமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான செய்திகள் வதந்தி.. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாலேயே மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைகோ பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் இதை பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி வலுவான முதல் நிலை கூட்டணியாக இருக்கும். அப்படி ஒரு வலுவான கூட்டணி அமைந்து விடக்கூடாது என்று சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.
இதனாலே சில விஷமிகள் திட்டமிட்டு பாஜக- திமுக கூட்டணி என வதந்தியை பரப்பி வருகின்றனர். மக்கள் யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததோ அந்த கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications