10 வருஷமாக குவா குவா சத்தத்தையே கேட்டறியாத மதுரை கிராமம்..!
மதுரை: மதுரை பக்கம் ஒரு கிராமத்தில் கடந்த 10 வருடமாக ஒரு குழந்தை கூட பிரசவிக்கவில்லையாம்.. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.. ஆனால் மீனாட்சிபுரம் என்ற அந்தக் கிராமத்தில் போய் பார்த்தால் ஆச்சரியம் மேலும் பல மடங்கு அதிகரிக்கிறது.
சிறுமலையின் மீது இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்தில்தான் இப்படி ஒரு நிலை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு 7வது மாதத்தில் வளைகாப்பை நடத்தி முடித்து விடுகின்றனர். பின்னர் அந்தப் பெண்ணை, அந்தப் பெண் மலையிலிருந்து கீழே கூட்டி கொண்டு போகப்படுகிறார். அங்கு போய் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர்தான் கிராமத்திற்கு வர வேண்டுமாம்.

ஏன் இப்படி...?
இந்த வழக்கத்திற்கு பாரம்பரிய காரணமோ அல்லது வேறு மாய மந்திரமோ காரணம் இல்லையாம்.. கிராமத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லை என்பதே இந்த பழக்கத்திற்குக் காரணமாம்.

சாலை கிடையாது
அவசர ஆத்திரத்திற்கு விரைந்து செல்வதற்கு நல்ல சாலை வசதி இந்த கிராமத்தில் கிடையாது.

அருமையான கிராமம்தான்... ஆனால்!
சிறுமலையின் மீது எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கிராமம் படு ரம்மியமாக இருக்கிறது. வெயிலை இவர்கள் அதிகம் பார்த்ததே கிடையாது. எப்போதுமே குளுமைதான்.. ஆனால் அடிப்படை வசதிகள்தான் படு மோசம்.

பிறந்து 10 வருஷமாச்சு
இந்தக் கிராமத்தில் கடந்த 10 வருடமாக எந்தக் குழந்தையும் பிறக்கவில்லையாம். பிரசவ வேதனை வந்து எந்தப் பெண்ணும் கதறி அழுததை இந்தக் கிராமத்து மக்கள் கடந்த 10 வருடமாக பார்த்ததில்லையாம். மருத்துவ வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகளை 7வது மாதத்திலேயே கீழே கூட்டிக் கொண்டு போவதால் ஏற்பட்டுள்ள நிலை இது.

தாய் வீட்டில் பிரசவம் நடந்ததே இல்லை!
வழக்கமாக முதல் குழந்தையை தாய் வீட்டில் போய் பெற்றுக் கொள்வது தமிழகப் பெண்களின் பழக்கம். காலம் காலமாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி ஒரு பழக்கத்தை இந்த ஊர்ப் பெண்கள் கடைப்பிடிக்க முடியாமல் வேதனையுடன் காலம் தள்ளிக் கொண்டுள்ளனராம்.

கச்சக்கட்டி போக வேண்டும்!
வாடிப்பட்டி அருகே உள்ள கச்சக்கட்டி என்ற ஊரில்தான் ஆரம்ப சுதாகார மையம் உள்ளது. இந்த கிராமத்து மருத்துவமனைக்குத்தான் மீனாட்சிபுரம் கர்ப்பிணிகள் வந்து பிள்ளை பெற்றுச் செல்கிறார்கள்.

கச்சகட்டி - வாடிப்பட்டியி்ல் வீடுகள் ரெடி
மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் கச்சக்கட்டி, வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் உறவினர்கள் வீடுகள் உள்ளனவாம். எனவே பிரசவத்திற்கு இந்த வீடுகள் ஏதாவது ஒன்றில் தங்கி பிரசவித்து பின்னர் தங்களது சொந்த ஊர் திரும்புவார்களாம். இல்லாவிட்டால் 2 மாதத்திற்கு வாடிப்பட்டியல் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்வார்களாம்.
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி நம்முடைய கிராமங்கள் அவல நிலையிலேயே இருக்கப் போகின்றனவோ...
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications