எல்லாம் அப்படி அப்படியே இருக்கிறது.. எதுவும் மாறலை... எச்.ராஜா
ஈரோடு: தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. எல்லாம் அப்படியேதான் உள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
ஈரோட்டுக்கு வந்த ராஜா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி பிரதமர் ஆன பிறகு அனைத்து மாநிலங்களிலும் பாகுபாடின்றி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை குறைந்து உள்ளது. அண்டை நாடுகளுடன் மோடி நல்லுறவை வளர்த்து வருகிறார்.

அதே சமயம் காங். ஆட்சியில் அண்டை நாடுகளுடன் உறவுகளுக்கு எந்த கொள்கையையும் வகுத்து செயல்படவில்லை. இதனால் அண்டை நாடுகள் விரோதப் போக்கினை கடைபிடித்து வந்தன. ஆனால் இப்போது அண்டை நாடுகளுடன் உறவுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு, இந்தி, இந்து, இந்துதுவா கொள்கையினை செயல்படுத்தி வருவதாக ஒரு முன்னாள் அமைச்சர் கூறுகிறார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை பா.ஜ.க.வின் கோஷமும் அதுவல்ல. காங். ஆட்சியின்போது பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்துள்ளது. இதை மறைக்கவே பா.ஜ.க. அரசு மீது வீண் பழியை சுமத்தி வருகிறார்.
எங்கள் கூட்டணியிலிருந்து நாங்கள் யாரையும் வெளியே போக சொல்லமாட்டோம். கூட்டணி அப்படியேதான் உள்ளது.
மங்கள்யான் வெற்றிக்கு தி.மு.க. தலைவர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இது இயற்கையானது. கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றால் எப்படி அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம் அல்லவா... அதேபோல்தான் இதுவும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications