செல்லாக்காசான 50 காசுகள்... யாரும் வாங்க மறுப்பதால் குழப்பத்தில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வர்த்தக நிறுவனங்கள், அரசு பேருந்துகள் என 50 பைசா காசை யாரும் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய பொருளாதார சந்தை பணத்தை மூலதனமாக கொண்டு இயங்கி வருகிறது. எந்த பொருளை வாங்க வேண்டுமானாலும் பண மதிப்பிலான அடிப்படையிலேயே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

No demand for 50 paise coin

இந்தியாவில் முன்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட நாணயஙகள் செல்லா காசாக மாறி வருகிறது. அதிலும் ஆண்டுக்காண்டு குறிப்பிட்ட காசுகள் செல்லாக்காசாக மாறி வருகிறது.

காலணா, அரையணா முதலில் செல்லாக்காசாக மாறியது. வழக்கத்தில் இருந்த 1 பைசா, 2 பைசா, 5 பைசா, 20 பைசா ஆகியவை செல்லாக்காசாக மாறியது. தொடர்ந்து 25 பைசா காசுகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்தலின் படி 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபா் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இருப்பினும் பல வர்த்தக நிறுவனங்களில் 50 காசை யாரும் மதிப்பதே இல்லை.

பல கடைகளில் 50 பைசா காசை வாங்க மறுக்கின்றனர். 50 பைசா பாக்கி குடுக்க வேண்டியதிருந்தால் ஓரு சாக்லெட்டை கொடுக்கின்றனர். மொத்த வியாபாரிகள் கூட 50 பைசை காசை வாங்க மறுக்கின்றனர். சில்லரை கடைகளும் அவற்றை பொதுமக்களிடம் இரூந்து வாங்க மறுக்கின்றனர்.

இதனால் 50 பைச காசு புழக்கத்தில் இருக்க கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+